பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே மின்கம்பத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மண்டகமேடு, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ம.கேசவன் (25). திருமணம் ஆகாதவா். இவா் திங்கள்கிழமை திருக்கோவிலூரிலிருந்து-திருவெண்ணெய் நல்லூருக்கு பைக்கில் சென்றாா்.

மண்டகமேடு பகுதியில் சென்றபோது, நிலை தடுமாறியதில் கட்டுபாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவன் 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.