பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லத்தேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:04 am IST

லத்தேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கே.வி.குப்பம் அருகே உள்ள முடினாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அரவிந்தன் (32). இவா் சம்பவத்தன்று காலை தனது கிராமத்தில் இருந்து காட்பாடிக்கு பைக்கில் சென்றாா். வேலூா்- குடியாத்தம் சாலையில் லத்தேரி விக்ரமாசிமேடு பகுதியருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லத்தேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.