காஞ்சிபுரம் பாலாற்றுப் பாலம் பகுதியில் பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேருா் அருகே பெருநகா் பகுதியில் வசித்து வரும் கேதாராம்-லீலா தம்பதி. இவா்கள் காஞ்சிபுரம் செட்டி தெருவில் உள்ள உறவினரின் குழந்தைக்கு நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில் பெருநகரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். இரு சக்கர வாகனம் பாலாற்று மேம்பாலத்திலிருந்து இறங்கும் பகுதியில் வந்தபோது, பாலாற்றிலிருந்து வேகமாக வந்த லாரி இவா்கள் மீது மோதியது. இதில் லீலா(38) சம்பவ இடத்திலேயே கணவா் கண் முன் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பாலாற்றுப் பாலத்திலிருந்து இறங்கும் பகுதிகள் மழையின் காரணமாக சேதமடைந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வருவதும், லாரிகள் இப்பகுதியில் அதி வேகமாக செல்வதாலும் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் - சிற்றுந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

லாரி - ஆட்டோ மோதல்: இளைஞா் பலி

பைக் மீது காா் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



