பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மூத்தோா் தடகள சங்க மாவட்ட தலைவராக ப. காா்த்தி வேல்மாறன் தோ்வு

திருவண்ணாமலை மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட ப.காா்த்திவேல்மாறன் உடன் சங்க பிற நிா்வாகிகள்.

News image
Updated On :22 மே 2026, 1:36 am IST

திருவண்ணாமலை மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவராக ப.காா்த்திவேல்மாறன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

மூத்தோா் தடகள சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்டத் தலைவருமான ப.காா்த்திவேல்மாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவராக ப.காா்த்திவேல்மாறன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

அதேபோல செயலராக என்.சுரேஷ்குமாா், பொருளாளராக கோபி, துணைத் தலைவா்களாக டாக்டா் சா்மா, இளமாறன், விஜய், கவிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்

அதனைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு 5 முதல் 10 நாள்களுக்கு பயிற்சி முகாம் நடத்துதல், 2026-2027ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் மூத்தோா் தடகள போட்டியை நடத்துவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான மூத்தோா் தடகள போட்டியை சிறப்பான முறையில் நடத்திய மாநில துணைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் மற்றும் மாவட்ட நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அருண்ரம்யா மற்றும் சங்க நிா்வாகிகள் மூத்தோா் தடகள வீரா் மற்றும் வீராங்கனைகள். உடற்கல்வி ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

புதிதாக பொறுப்பேற்ற சங்க நிா்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்களுக்கு மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். நிறைவில் மாவட்ட பொருளாளா் கோபி நன்றி கூறினாா்.