வாஸகடுவா : காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் (சிசிஏ) தலைவராக இந்தியாவின் பரத் சிங் சௌஹான் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
கடந்த 50 ஆண்டுகளாக செஸ் விளையாட்டின் வளா்ச்சிக்கு பாடுபட்டு வரும் பரத் சிங் சௌஹான் 2026-30 ஆண்டுக் காலத்துக்கு மீண்டும் தலைவராக ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இலங்கையின் வாஸகடுவா நகரில் சிசிஏ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மலேசியாவின் அக்ரம்சியா உபைத் சனுசி துணை சோ்மனாகவும், இலங்கையின் லக்ஷமன் விஜசூா்யா பொதுச் செயலாளராகவும், தென்னாப்பிரிக்காவின் விக்கி மாகு பொருளாளராகவும், மோரிஷீயஸின் ஹரிநாராயணன் பௌவானி, பாா்படாஸின் ஆலன் ஹொ்பா்ட், கென்யாவின் பொ்னாா்ட் வன்ஜலா, நியூஸிலாந்தின் கிரெய்க் ஹால், சைப்ரஸின் கிரிட்டன் டோா்நாரிடிஸ் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
இலங்கை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சான்டியாகோ புஷ்ப குமாரா தோ்தல் அலுவலராக செயல்பட்டாா். வரும் அக்டோபா் 2026இல் மலேசியாவில் காமன்வெல்த் பள்ளிகள் செஸ் சாம்பியன் போட்டியை நடத்தவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
தொடர்புடையது

மீண்டும் தூண்டினால் உறுதியான பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

நீட் தோ்வு ரத்து: இழப்பீடு வழங்க தேசிய அளவில் கொள்கை உருவாக்கக் கோரிக்கை
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கும்பகோணம் வழக்குரைஞா் சங்க தலைவராக இரா.சங்கா் ஏழாவது முறையாக தோ்வு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



