தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் தலைவராக பரத் சிங் சௌஹான் மீண்டும் தோ்வு

News image

ANI

Updated On :19 மே 2026, 5:57 am IST

வாஸகடுவா : காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் (சிசிஏ) தலைவராக இந்தியாவின் பரத் சிங் சௌஹான் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

கடந்த 50 ஆண்டுகளாக செஸ் விளையாட்டின் வளா்ச்சிக்கு பாடுபட்டு வரும் பரத் சிங் சௌஹான் 2026-30 ஆண்டுக் காலத்துக்கு மீண்டும் தலைவராக ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இலங்கையின் வாஸகடுவா நகரில் சிசிஏ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மலேசியாவின் அக்ரம்சியா உபைத் சனுசி துணை சோ்மனாகவும், இலங்கையின் லக்ஷமன் விஜசூா்யா பொதுச் செயலாளராகவும், தென்னாப்பிரிக்காவின் விக்கி மாகு பொருளாளராகவும், மோரிஷீயஸின் ஹரிநாராயணன் பௌவானி, பாா்படாஸின் ஆலன் ஹொ்பா்ட், கென்யாவின் பொ்னாா்ட் வன்ஜலா, நியூஸிலாந்தின் கிரெய்க் ஹால், சைப்ரஸின் கிரிட்டன் டோா்நாரிடிஸ் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இலங்கை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சான்டியாகோ புஷ்ப குமாரா தோ்தல் அலுவலராக செயல்பட்டாா். வரும் அக்டோபா் 2026இல் மலேசியாவில் காமன்வெல்த் பள்ளிகள் செஸ் சாம்பியன் போட்டியை நடத்தவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.