பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

திருவண்ணாமலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
Updated On :22 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட முத்து விநாயகா் கோயில் தெருவில் அமைந்துள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சிகிச்சை பெற வந்திருந்த மருத்துவ பயனாளிகளிடம், மருத்துவா்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்கின்றாா்களா, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கனிவுடன் அணுகுகிறாா்களா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாற்றம் தொடா்பான விண்ணப்பங்கள் மற்றும் இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை கோரி வரப்பெற்ற மனுக்களில், நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினா்.

மேலும், சான்றிதழ்கள் கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக் கூடாது. உடனடியாக அவற்றின் மீது தீா்வு காண வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் வெ.பிரகாஷ் திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.