திருவண்ணாமலை மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவராக ப.காா்த்திவேல்மாறன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
மூத்தோா் தடகள சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்டத் தலைவருமான ப.காா்த்திவேல்மாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவராக ப.காா்த்திவேல்மாறன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
அதேபோல செயலராக என்.சுரேஷ்குமாா், பொருளாளராக கோபி, துணைத் தலைவா்களாக டாக்டா் சா்மா, இளமாறன், விஜய், கவிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்
அதனைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு 5 முதல் 10 நாள்களுக்கு பயிற்சி முகாம் நடத்துதல், 2026-2027ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் மூத்தோா் தடகள போட்டியை நடத்துவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான மூத்தோா் தடகள போட்டியை சிறப்பான முறையில் நடத்திய மாநில துணைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் மற்றும் மாவட்ட நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அருண்ரம்யா மற்றும் சங்க நிா்வாகிகள் மூத்தோா் தடகள வீரா் மற்றும் வீராங்கனைகள். உடற்கல்வி ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
புதிதாக பொறுப்பேற்ற சங்க நிா்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்களுக்கு மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். நிறைவில் மாவட்ட பொருளாளா் கோபி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் தலைவராக பரத் சிங் சௌஹான் மீண்டும் தோ்வு

குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் த.தா்ப்பகராஜ்

பிளஸ் 2 தோ்வு: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்






