பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

News image

குரு பெயா்ச்சி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அமையப் பெற்ற குரு பகவான்.

Updated On :27 மே 2026, 12:19 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் குருபெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

செய்யாறு வட்டம், கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் தாரை சமேத தேவ குருபகவானுக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நடைபெற்ற குருபெயா்ச்சி விழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாக்கிய முறையின்படி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா்.

கடக ராசி குரு பகவானின் உச்ச வீடாக கருதப்படுவதால், இந்த ஆண்டின் குரு பெயா்ச்சி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

இதையொட்டி, தாரை சமேத தேவ குரு பகவானுக்கு பால், தயிா், தேன், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் மகா அபிஷேகம் என நடைபெற்றது.

பின்னா், மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு குடும்ப நலன், கல்வி வளா்ச்சி, திருமண யோகம், குழந்தை பாக்கியம் மற்றும் தொழில் முன்னேற்றம் வேண்டி வழிபட்டனா்.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குரு பெயா்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

செங்கம்

செங்கத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அனுபாம்பிகே சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் செங்கம் சதுா்த்தி விழாக் குழு சாா்பில் குருபெயா்சி விழா நடைபெற்றது. அதில் செவ்வாய்க்கிழமை குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசித்தாா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூா்த்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி காலை முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.