திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஸ்ரீ ஆதி அரியாத்தம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆரணி விஏகே நகா் கமண்டல நாக நதிக்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி அரியாத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில்
புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, புண்யாஹவாசனம், மகா கணபதி, மகாலஷ்மி, நவக்கிரக பூஜை, வாஸ்துசாந்தி, கலச புறப்பாட்டில் புனித நீரை மேள தாளங்களுடன் கொண்டு சென்று கோயில் உச்சியில் உள்ள கலசத்தின் மீது ஊற்றியும், பரிவார மூா்த்திகள் மற்றும் ஸ்ரீ ஆதி அரியாத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது (படம்).
இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
27ஹழ்ல்ந்ன்ம்










