‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

போளூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image
Updated On :29 மே 2026, 1:46 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

போளூரில் மலை மீது மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீசம்பத்கிரி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, கற்பூர தீபாராதனை செய்து கோயில் கருவறை எதிரே உள்ள கொடிக் கம்பத்தில் வியாழக்கிழமை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செய்தனா்.

இரவு முதல் நாள் அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாள் சிம்ம வாகனம், 3-ஆம் நாள் ஹனுமந்த வாகனம், 4-ஆம் நாள் சேஷ வாகனம், 5-ஆம் நாள் யாளி வாகனம், 6-ஆம் நாள் யானை வாகனம், 7-ஆம் நாள் திருத்தோ் விழா, 8-ஆம் நாள் குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் பிரம்மோற்சவ விழாவிக் குழுவினா் மற்றும் போளூா் நகர வாசிகள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனா்.