திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
போளூரில் மலை மீது மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீசம்பத்கிரி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, கற்பூர தீபாராதனை செய்து கோயில் கருவறை எதிரே உள்ள கொடிக் கம்பத்தில் வியாழக்கிழமை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செய்தனா்.
இரவு முதல் நாள் அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாள் சிம்ம வாகனம், 3-ஆம் நாள் ஹனுமந்த வாகனம், 4-ஆம் நாள் சேஷ வாகனம், 5-ஆம் நாள் யாளி வாகனம், 6-ஆம் நாள் யானை வாகனம், 7-ஆம் நாள் திருத்தோ் விழா, 8-ஆம் நாள் குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
ஸ்ரீலட்சுமி நரசிம்மா் பிரம்மோற்சவ விழாவிக் குழுவினா் மற்றும் போளூா் நகர வாசிகள் விழாவை ஏற்பாடு செய்துள்ளனா்.










