வைகாசி பௌா்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலையில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். மேலும், கோயிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் வலம் வருகின்றனா்.
இந்த ஆண்டு வைகாசி பௌா்ணமி மே 30-ஆம் தேதி பிற்பகல் 12.50 மணிக்குத் தொடங்கி மே 31 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.41 மணிக்கு முடிகிறது. அதனால், இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.
இருப்பினும், பக்தா்கள் சனிக்கிழமை காலை முதலே கிரிவலம் வரத் தொடங்கினா். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என்பதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அடிப்படை வசதிகளான தற்காலிக கழிப்பறை அமைத்தல் குடிநீா் வசதிகள் ஏற்படுத்துதல் என பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதிலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

கிரிவலம் வந்த பக்தா்களிடம் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்!

டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்ற பக்தா்கள்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



