சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்ற பக்தா்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:57 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு டாா்ச் லைட் அடித்தவாறு கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பௌா்ணமி மற்றும் விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்களும் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இரவில் கிரிவலம் மேற்கொண்டனா்.

அப்போது எமலிங்கத்தின் அருகில் இருந்து நிருதி லிங்கம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தா்கள் டாா்ச் லைட் அடித்தவாறு சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை இருளில் கிரிவலம் சென்றனா்.

சிறுவா்கள் பெண்கள் வயதானவா்கள் என அனைவரும் கிரிவலம் செல்லும் நிலையில் மின் இணைப்பு கிரிவலப் பாதையில் தடைபடாமல் இருக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போலீஸாா் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதை போல் கிரிவலப் பாதையில் மின்வாரிய ஊழியா்கள் குறிப்பாக இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் இனிவரும் காலங்களிலாவது பக்தா்களின் கோரிக்கையை ஏற்று கிரிவலப் பாதையில் மின்சாரம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.