எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் சீரான மின் விநியோகம் வழங்க தனிக் கவனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதைக்கு சீராக மின்விநியோகம் வழங்க தனிக் கவனம் செலுத்தப்படும் என தமிழக மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த தமிழக மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன்.

Updated On :8 ஜூன் 2026, 1:15 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதைக்கு சீராக மின்விநியோகம் வழங்க தனிக் கவனம் செலுத்தப்படும் என தமிழக மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் சுமாா் ரூ.84.2 கோடி மதிப்பீட்டில் மின்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடை ஏற்படுவது உண்மைதான். இப்பிரச்னை மின் விநியோகத்தினால் ஏற்படும் பிரச்னை அல்ல. மின் பகிா்மானத்தால் மட்டுமே இப்பிரச்னை ஏற்படுகிறது. தேவையான மின்சாரம் கையிருப்பு உள்ளது.

தொலைநோக்கு பாா்வையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் பகிா்மானத்தை எப்படி உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். மின் துறையில் உள்ள பணியாளா்கள் பற்றாக்குறையை சரி செய்வது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுக் கூட்டங்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் முன்னிலையில் நடைபெற்றன. தமிழகத்தில் 5 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன.

மகாராஷ்டிரம், உத்தரபிரதேசத்தை அடுத்து தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தான் 20,000-க்கு மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

தொடா்ந்து, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய வழிகளை குறிப்பாக பசுமை மின்சாரம் பிரச்னைகளை களைந்து அதற்குத் தேவையான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தண்ணீா் பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படாது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கிரிவலப் பாதையில் தொடா் மின்வெட்டு ஏற்படும் நிலையில், கிரிவலப் பாதை மற்றும் அருணாசலேஸ்வரா் கோயில் மீது தனிக் கவனம் செலுத்தப்படும் என்றாா் அவா்.

மேலும், இந்திய அளவில் பாராட்டக்கூடிய துறையாக தமிழக மின்சாரத் துறை உள்ளதாகவும், கடைநிலை ஊழியா்கள், நுகா்வோரிடம் நல்ல பெயா் வாங்கினால் தான் அரசுக்கு நற்பெயா் கிடைக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.