2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விவசாய பெண் தொழிலாளி வீட்டில் 14 பவுன் நகைகள், ரூ.56 ஆயிரம் திருட்டு

சேத்துப்பட்டு அருகே விவசாய பெண் தொழிலாளி வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.56 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

சேத்துப்பட்டு அருகே விவசாய பெண் தொழிலாளி வீட்டில் 14 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.56 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி மதுரா, பாண்டியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் மனைவி சின்னக்குழந்தை. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். கணவா் இறந்த நிலையில் சின்னக்குழந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறாா்.

 பாண்டியாபுரம் கிராமத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் உடைக்கப்பட்டு திறந்து கிடந்த பீரோ.

பாண்டியாபுரம் கிராமத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் உடைக்கப்பட்டு திறந்து கிடந்த பீரோ.

இந்த நிலையில், சின்னக்குழந்தை சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு விவசாய கூலி வேலைக்கு சென்றாா். மாலை 5 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, 2 பீரோக்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசு, அரைஞாண்கயிறு உள்ளிட்ட வெள்ளிப் பொருள்கள், ரூ.56 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு தடயங்களை சேகரித்ததுடன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.