பொலிவு பெறுகிறது திருவலம் ராஜேந்திரா இரும்புப் பாலம்!
சுமார் 76 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவலம் ராஜேந்திரா இரும்புப் பாலத்துக்கு வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட பழைய இரும்புப் பாலம் புதுப்பொலிவு பெற்று வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.










