இந்நிலையில் இக்கல்லூரிக்கு ரூ.7.25 கோடி நிதியில் புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி, அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் கட்டடப் பணியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. தற்போது இக்கட்டடம் கட்டி முடித்து திறப்பு விழாவுக்குத் தயாராக இருக்கிறது. இக்கட்டடத்தில் 30 வகுப்பறைகள், மூன்று ஆய்வகங்கள், முதல்வர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அறைகள், நூலகம், கணிணி அறைகள் என நிகழ்கால தேவைகளுடன் சிறப்பாக கட்டடம் கட்டிக்கப்பட்டு உள்ளது. 2015 ஜூன் மாதம் கட்டடம் திறக்கப்பட்டு விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கட்டடம் இன்று வரை திறப்பு விழா காணாமல் உள்ளது. இக்கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதால் வெகு சிரமத்துடன் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.