மூளைச்சாவு அடைந்த சித்தூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியரின் உடலுறுப்புகள் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மூலம் தானம் செய்யப்பட்டன. அவரது உடலுறுப்புகள் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ராம்நகர் காலனியைச் சேர்ந்தவர் ஏ.வி.ரமணாரெட்டி (58). இவர், தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி. கடந்த திங்கள்கிழமை ரமணாரெட்டி, தனது அடுக்குமாடி வீட்டின் 2-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ரமணாரெட்டி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து ரமணாரெட்டியின் கண்கள், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன. இந்த உடலுறுப்புகள் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சிஎம்சி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








