கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பேர்ணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :19 ஏப்ரல் 2018, 1:16 am IST

பேர்ணாம்பட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காஷ்மீரில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபா மரணத்துக்கு நீதிகேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் தேவகிராணி தலைமை வகித்தார். மாநில மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் கிருஷ்ணவேணி, நகரத் தலைவர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் சினேகா, மகேஸ்வரி, வரலட்சுமி, மணியம்மாள், செல்வகுமார், ராஜேந்திரன், பெரியதம்பி, திமுக பேச்சாளர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.