கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை

திருப்பத்தூர் அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணும், அவரது காதலரும் புதன்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:23 pm

DIN

திருப்பத்தூர் அருகே திருமணம் நிச்சயித்த பெண்ணும், அவரது காதலரும் புதன்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்பத்தூரை அடுத்த மேல்அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமனின் மகள் பாரதி (20). கீழ் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடராஜின் மகன் கார்த்திக் (21). இவர், ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாரதிக்கு வேறு ஒருவருடன் பிப்ரவரி 26-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. 
இந்நிலையில், புதன்கிழமை பாரதி தனது வீட்டில் விஷமருந்தினார். அதேபோல் கார்த்திக்கும் தனது வீட்டில் விஷமருந்தினார். இதையடுத்து இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் இறந்தனர். இதையடுத்து பாரதியின் சடலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. கார்த்திக்கின் சடலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.