பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோ-ஆஃப்டெக்ஸில் சிறப்புச் சலுகை விற்பனை தொடக்கம்

வேலூர் சாரதி மாளிகையிலுள்ள தீபம் கோ-ஆஃப்டெக்ஸில் 2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சிறப்புச் சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:01 am

DIN

வேலூர் சாரதி மாளிகையிலுள்ள தீபம் கோ-ஆஃப்டெக்ஸில் 2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சிறப்புச் சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோ-ஆஃப் டெக்ஸின் வேலூர் மண்டல மேலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். 
காஞ்சிபுரம் மேலாளர் காங்கேயவேலு முன்னிலை வகித்தார். தீபம் கோ-ஆஃப்டெக்ஸ் மேலாளர் சேகர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, கோ-ஆஃப் டெக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், 2 சேலை வாங்கினால், ஒன்று இலவசம் என்ற இந்தச் சலுகை  மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதையொட்டி, அனைத்து விடுமுறை நாள்களிலும் கடை செயல்படும். மேலும், ஒரே ரக துணி வாங்கினால் 20 சதவீத தள்ளுபடியும் உள்ளது. 
கனவு நனவுத் திட்டம் என்ற புதிய சேமிப்புத் திட்டம் மூலம் ரூ.300, ரூ.500, ரூ.1000 என 9 மாதங்களுக்கு தொடர் தவணை செலுத்தினால் வாடிக்கையாளர்கள் விரும்பும் துணிகளை எடுத்து கொள்ளலாம். அதிலும் 30 சதவீத தள்ளுபடி உண்டு என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.