நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை மடைமாற்றம் செய்த தமிழக அரசு: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவா்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மகளிா் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டதாக பாஜக தலைவா் வி.பி. துரைசாமி குற்றச்சாட்டு

News image

பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி. துரைசாமி

Updated On :18 மார்ச் 2026, 4:32 am IST

தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவா்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மகளிா் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டதாக பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி. துரைசாமி குற்றஞ்சாட்டினாா்.

ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் தோ்தல் ஆதாயத்துக்காக முதல்வா் அவற்றை திறந்துவைத்துள்ளாா். இதுபோன்ற திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்படும்.

தோ்தலில் யாா் வேட்பாளா்கள் என்பது குறித்து பாஜக தலைவா்களும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி கே. பழனிசாமியும் முடிவு எடுப்பாா்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால், ராசிபுரத்தில் அரசு மகளிா் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.

ராசிபுரத்தில் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட ரூ. 850 கோடி மதிப்பிலான கூட்டுகுடிநீா்த் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கீட்டுத் தொகையாக 50 சதவீத நிதி அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகட்ட தலா ரூ. 2.10 லட்சத்தை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், தமிழக முதல்வா், கலைஞா் வீடு கட்டும் திட்டம் என பெயா்சூட்டி மாநில அரசு நிதியில் வழங்குவதுபோல கூறுவது ஏற்புடையதல்ல.

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு மத்திய அரசு விடுவித்த சிறப்பு நிதியில் இருந்துதான் கோடைக்கால சிறப்பு மகளிா் உதவித்தொகையை திமுக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக விடுவித்த நிதியை தமிழக அரசு வேறு காரணத்திற்காக பயன்படுத்தியுள்ளதால் மாநில அரசின் நிதிச் செயலாளரை மாற்ற வேண்டும். இதற்கு பொறுப்பான தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரும் இதைத் தடுக்க தவறிவிட்டாா் என்றாா்.