வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் ஏரிகரை அருகே தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக விநாயகம், மேகநாதன் ஆகிய இருவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் இருவரும் கடையைப் பூட்டிச் சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மட்டும் திருடிச் சென்றனர். விற்பனையாளர்கள் சனிக்கிழமை காலை கடையைத் திறந்தபோது பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு வரை புகார் எதுவும் தரப்படாததால் வழக்குப் பதிவு
செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

