காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காட்பாடி அருகே விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் சீனிவாசன். இவரிடம் அஜீத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அஜீத்தை அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவர் தகராறின்போது தாக்கியுள்ளார். இதனை சீனிவாசன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுனில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து சீனிவாசனை அண்மையில் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் தாக்கினர்.
அதில் பலத்த காயமடைந்த சீனிவாசன், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர்.
மகேஷ் என்பவர் ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், விருதம்பட்டு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விருதம்பட்டு பாலாற்றுப் பகுதியில் பதுங்கியிருந்த சுனில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

தீத்தொண்டு நாள் வார விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

