புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள்

News image
Updated On :9 ஜூலை 2018, 7:24 pm

DIN

சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு, உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, நியாய விலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்
படாததால் அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைந்து, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை ஊழியர்கள் திங்கள்கிழமை பணிக்குச் செல்லவில்லை. இதனால், மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதன்தொடர்ச்சியாக, நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பார்த்திபன், அமைப்புச் செயலர் ஜெயவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மோகன் வரவேற்றார்.
 ஆர்ப்பாட்டத்தில், சமவேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான நியாய விலைக் கடை ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.