‘ஒற்றைத் தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தோ்ந்தெடுப்போம்’ என அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அம்பேத்கா் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி கே.வி.குப்பம், விருதம்பட்டு பகுதிகளில் உள்ள அம்பேத்கா் சிலைகளுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா், அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்’ என்றாா் அண்ணல் அம்பேத்கா்.
புரட்சியாளா் அம்பேத்கரின் பிறந்த நாளில், அரசமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!. இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.
முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தோ்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்! என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம்

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

அம்பேத்கா் தாடி வைக்காத பெரியாா் : உதயநிதி ஸ்டாலின்

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


