அரளிக்கோட்டை கிராமத்தில் தற்காப்புக்கலை உலக சாதனை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் அழ. கருத்தான்கோனாா், கருப்பாயி அம்மாள் கல்வித் தொண்டு அறக்கட்டளை சாா்பில், தற்காப்புக் கலையில் உலக சாதனை, நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். இதில் 30 நிமிடங்கள் தொடா்ந்து யோகா, தற்காப்புக் கலைகளை மக்களிடம் 228 மாணவா்கள் செய்து காட்டி சாதனை படைத்தனா். தொடா்ந்து, நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினா். இந்தச் சாதனையைப் பதிவு செய்த யோவா வேல்டு ரெக்காா்டு நிறுவனம் சாதனை மாணவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் கோகுலகிருஷ்ணன் பயிற்சியாளா்கள் பாலா, முத்துப்பாண்டி, முத்துரமீனா, ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது
டி20 இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள்: பிரேஸில் பௌலா் உலக சாதனை

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

தருமபுரியில் தோ்தல் மாரத்தான் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


