திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

8 வழிச்சாலைக்கு எதிராக  போராடிய விவசாயிகள்  ஜாமீனில் விடுவிப்பு

திருவண்ணாமலையில் 8 வழிச் சாலைக்கு எதிராக போராடி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:05 am

DIN

திருவண்ணாமலையில் 8 வழிச் சாலைக்கு எதிராக போராடி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர்.
 சென்னை - சேலம் இடையே பசுமை விரைவுச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பல ஆயிரம் விவசாய நிலங்களும் அடங்கும். 
அதனால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கம் சார்பாக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் 92 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் 63 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 63 பேர் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.