கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு  விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்

அதிகரித்துவரும் சாலை விபத்துகளைக் குறைக்க பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நந்தகோபால் வலியுறுத்தியுள்ளார்.  

Updated On :24 ஜூலை 2018, 12:35 am IST

அதிகரித்துவரும் சாலை விபத்துகளைக் குறைக்க பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நந்தகோபால் வலியுறுத்தியுள்ளார்.  
ஆற்காடு டெல்லி கேட் அரிமா சங்கம் தொடக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ராணிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் எஸ்.கௌரி ஜெகந்நாதன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் சி.சிவராஜ், வட்டாரத் தலைவர் எஸ்.பி.தினமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நந்தகோபால் கலந்துகொண்டு, புதிய சங்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தலைவர் டி.அரிபாபு, செயலாளர் சி.ராஜேந்திரன், பொருளாளர் ஜி.சம்மந்தன் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தும், நலிந்தோறுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்  நல  உதவிகளை வழங்கியும் பேசியதாவது: உலக அளவில் சேவை நோக்குடன் செயல்பட்டுவரும் சங்கங்களில் 217 நாடுகளில் லட்சக்கணக்கான சேவையாளர்களைக் கொண்ட முதன்மையான சேவை சங்கமாக அரிமா சங்கம் திகழ்கிறது. தற்போது அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்க பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். 
விழாவில் அரிமா சங்க முதல் துணை நிலை ஆளுநர் வி.ராமர், இரண்டாம்  துணை நிலை  ஆளுநர் கே.அருண்குமார், முன்னாள் மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன், கேபினெட் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், பொருளாளர் எஸ்.மதியழகன் மற்றும் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.