வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2-இல் 12-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (80). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு வீராசாமி படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது, குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துச் சிதறியது.
படுக்கை விரிப்புகளின் மீது பற்றிய தீ வீராச்சாமி மீது பற்றி எரிந்தது. இதில், பலத்த காயமடைந்த வீராச்சாமி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வீராசாமி வியாழக்கிழமை இறந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதப் பலன்கள் - விருச்சிகம்

மே மாதப் பலன்கள் - துலாம்

மே மாதப் பலன்கள் - கன்னி

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

