வேலூர் மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனை பெண் கைது ஒருவர் சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், மத்திய பெண்கள் சிறையில் கொலை, திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுமார் 350 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மனநல மருத்துவர் செல்வக்குமார், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தார்.
அப்போது, சிறை சமையலறையில் ஓசூரைச் சேர்ந்த கொலைக் கைதியான வித்யா(30) இருந்தார். அவரை சிறை வார்டன் சுதா மருத்துவப் பரிசோதனைக்கு வரும்படி அழைத்தாராம். ஆனால், கைதி வித்யா மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.
அப்போது, சுதாவுக்கும், கைதி வித்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வித்யா, சிறை வார்டன் சுதாவை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினரும், போலீஸாரும் வார்டன் சுதாவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு: நடிகை கஸ்தூரி பிரசாரம்

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

