
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற வேண்டி ஒரு கோடி தாமரை விதைகளைக் கொண்டு ஒரு கோடி ஜபத்துடன் சிறப்பு யாகம் கடந்த புதன்கிழமை தொடங்கியது.
யாகத்தின் 6- வது நாளான திங்கள்கிழமை 60 லட்சம் ஜபங்கள் தாமரை விதைகள், தாமரைப் பூக்கள், விசேஷ மூலிகை திரவியங்களுடன் குபேர யாகம் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆர்.நந்தகோபால், இந்து முன்னணி அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் எம்.பால்மாரியப்பன், ஸ்ரீராம் பட்டாச்சாரி, தென் இந்திய புரோகித சங்கத் தலைவர் வி.ஆர்.சீதாராமன், படவேட்டம்மன் கோயில் நிர்வாகி டபிள்யூ.ஜி.முரளி உள்ளிட்ட பக்தர்களுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் அருட்பிரசாதம் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




