விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் சொட்டுநீர்ப் பாசனம், கோழிப்பண்ணைகள் குறித்து விவசாயிகளுக்கு சான்றிதழ்களுடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்பு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறியதாவது: விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு மாத கால இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், சொட்டுநீர்ப் பாசனம், கோழிப்பண்ணை குறித்த அனைத்து தொழில்நுட்ப விளக்கங்களும், வங்கிகளில் கடன் வழங்கும் வசதிகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த ஒரு மாதகால பயிற்சி வகுப்புகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிற்சிக்கான முன்பதிவு அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 4 மணி வரை நடைபெறும். முதலில் வரும் 20 பேருக்கு மட்டும் நேர்காணல் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி பங்கேற்க 8-ஆவது முதல்
10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பயிற்சியின்போது வருகைப்பதிவு இல்லாதவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது. முன்பதிவுக்கு ஆதார் எண் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?

அறிமுக சீசனிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத்..! ஆனந்தக் கண்ணீரில் லபுஷேன்!
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

