சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பூங்காவில்  எம்எல்ஏ ஆய்வு

ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு,  இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:18 pm

ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு,  இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
அப்போது பூங்காக்களுக்கு வரும் பொதுமக்களுக்கு  இடையூறு இன்றி உரம் தயாரிக்கும் திட்டதை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் சாலையின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பள்ளமான பகுதியைப் பார்வையிட்டு, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
 நகராட்சி ஆணையர் ஷகிலா, பொறியாளர் அனந்தஜோதி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.