ஆற்காடு அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை நெமிலி அருகேயுள்ள மகேந்திரவாடி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் (40) ஓட்டிச் சென்றார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் சென்னையிலிருந்து ஒசூர் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்து நடத்துநர் முனுசாமி (35), பயணிகள் வேலூர் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்த அஜித் (22), சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர் (40), பெங்களூரைச் சேர்ந்த சரவணன் (44) உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? - அமைச்சா் ராஜ்மோகன் பதில்

துரித உணவகத்தில் ஏ.சி. வெடித்து ஊழியா் உயிரிழப்பு: 5 போ் காயம்

பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
திரைப்பட நடிகா் கஞ்சா கருப்புவின் சகோதரா் வாகனம் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
