வாணியம்பாடியை அடுத்த தும்பேரியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் அமைச்சர் நீலோபர்கபீல் நேரில் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் 23ஆம் மற்றும் 24ஆம் தேதிகளில் வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி, தும்பேரி ஊராட்சியில் அரசுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பணியாளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது நகர அதிமுக செயலர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பாரதிராஜா, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை இயக்குநர் சதீஷ்குமார், அருண் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

பழனியில் காரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிா்ப்பு

30 முதல் 90 வயதுடையோருக்கு தடகளப் போட்டி

அகில இந்திய ஹாக்கி: மும்பை இந்திய கப்பற்படை அணி சாம்பியன்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


