பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

உழவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.75 கோடி பருத்தி ஏலம்

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.

Updated On :23 ஜனவரி 2019, 8:40 am IST

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான தொழிலாக பருத்தி சாகுபடியைச் செய்து வருகின்றனர். அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பருத்தியை  மூட்டைகளாகக் கட்டி திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்துக்கு கொண்டு வந்தனர். 
பருத்தி ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏலம் எடுக்க திருப்பூர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். 5 ஆயிரம் மூட்டை பருத்தி மூட்டைகள் டி.சி.எச். எனப்படும் பருத்தி ரகம் ரூ. 7 ஆயிரத்து 400-க்கும், ஆர்.சி.எஸ். எனப்படும் பருத்தி ரூ. 6 ஆயிரத்து 300-க்கும் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.