சென்னை மண்டல அளவிலான அஞ்சல்துறை விநாடி-வினா போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற அரக்கோணம் கடற்படை குழந்தைகள் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய அஞ்சல்துறை பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் விநாடி-வினா போட்டியை நடத்துகிறது.
காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தபால்தலை, இன்றைய நடப்புகள் ஆகிய தலைப்புகளில் அரக்கோணம் கோட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்ற அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக கடற்படை குழந்தைகள் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்கள் அரிகுமார், ஜெய்கிருஷ்ணா ஆகியோர் இணைந்து முதற்பரிசைப் பெற்றனர். இந்நிலையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக கடற்படை குழந்தைகள் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அரிகுமார், ஜெய்கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இரண்டாம் பரிசைப் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசை தலைமை அஞ்சல்துறை அதிகாரி ஆனந்த் வழங்கினார். வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் இருவரையும் பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


