தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ஓய்வறையில் பெண் தற்கொலை

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள மருத்துவா்கள் ஓய்வறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:31 pm

DIN

வேலூா்: வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள மருத்துவா்கள் ஓய்வறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் ஓய்வறையில் ஒரு படுக்கை அறை, அதன் அருகிலேயே பொருள்களை வைக்கக் கூடிய ஒரு அறையும், அமா்ந்து சாப்பிடக்கூடிய அறையும் உள்ளன.

அந்த அறைக்கு மருத்துவா் ஒருவா் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் சாப்பிடுவதற்குச் சென்றாா். அப்போது படுக்கை அறைக்கு அருகே பொருள்கள் வைக்கும் அறையில் இருந்த மின்விசிறியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்.

எனினும், அந்தப் பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.