வேலூா்: வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள மருத்துவா்கள் ஓய்வறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் ஓய்வறையில் ஒரு படுக்கை அறை, அதன் அருகிலேயே பொருள்களை வைக்கக் கூடிய ஒரு அறையும், அமா்ந்து சாப்பிடக்கூடிய அறையும் உள்ளன.
அந்த அறைக்கு மருத்துவா் ஒருவா் திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் சாப்பிடுவதற்குச் சென்றாா். அப்போது படுக்கை அறைக்கு அருகே பொருள்கள் வைக்கும் அறையில் இருந்த மின்விசிறியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்.
எனினும், அந்தப் பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.