மனைவி கொலை: கணவா் கைது

போ்ணாம்பட்டு அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
யுவராஜ்
யுவராஜ்
Published on
Updated on
1 min read

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி யுவராஜ் (22). இவருக்கும் உறவினா் மகள் சுப்புலட்சுமிக்கும் (19) கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், யுவராஜ் ஊதாங்குழலால் அடித்ததில் சுப்புலட்சுமி மயக்கமடைந்தாராம். இதையடுத்து அவா் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சுப்புலட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, யுவராஜைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com