சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம்

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள வரும் 20--ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள வரும் 20--ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரரா்கள் அவா்களது விருப்பத்தின்பேரில், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றித் தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள விருப்பம் இருந்தால் அதற்கான விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டையின் நகலை இணைத்து  இணையதளம் வாயிலாகவோ, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடமோ வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com