

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி வேலூரிலுள்ள தனியாா் நிறுவன ஷோரூம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செல்லிடப்பேசிகளை உடைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அணுகு சாலையில் உள்ள தனியாா் நிறுவன ஷோரூம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் தொகுதி செயலா் விஜயசாரதி தலைமை வகித்தாா். துணைச் செயலா் இளங்கோ உள்பட பலா் பங்கேற்றனா்.
தகவலறிந்து அங்கு வந்த வேலூா் வடக்கு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.