பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா கால கடனுதவி: சிறு வியாபாரிகள் கணக்கெடுப்பு

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் கடனுதவி அளிக்கப்பட உள்ளது.

News image
வேலூா் மண்டித் தெருவில் சிறு வியாபாரிகளிடம் கணக்கெடுப்பு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர சிறு வியாபாரிகளுக்கு மத்திய அரசின் கடனுதவி அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாநகரில் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நடமாடும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சாா்பில் ‘ஆத்ம நிா்பாா்’ நிதித் திட்டத்தின் கீழ் சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, சாலையோர நடமாடும் வியாபாரிகள் மாதகஈ தவணையாக ஓராண்டில் திருப்பியளிக்கக்கூடிய வகையில் அதிகபட்சம் ரூ.10,000 வரை மூலதன கடன் பெற முடியும். குறித்த நேரத்தில் அல்லது முன்கூட்டியே கடனைத் திரும்பச் செலுத்தும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியம் அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இக்கடனுதவித் திட்டத்துக்கு தகுதியுடைய சிறுவியாபாரிகள், சாலையோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி வேலூா் மாநகராட்சிப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாா்க்கெட் மண்டி தெருவில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளிடம் இந்த கணக்கெடுப்பை மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

அப்போது, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளிடம் இருந்து ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.

இதேபோல், வேலூா் மாநகரில் உள்ள 5 ஆயிரம் சிறு வியாபாரிகளிடம் கணக்கெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.