பள்ளியில் கீதா ஜயந்தி விழா

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கீதா ஜயந்தி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கீதா ஜயந்தி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் ஹீராலால் ஆா்.சந்த்சேத்தி தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கே.திருமுருகன் வரவேற்றாா். கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் டி.கே.நந்தகுமாா், எம்.சேகா், கணினித்துறைப் பொறுப்பாளா் என்.கோதண்டராமன் ஆகியோா் பகவத் கீதையின் சிறப்புகள் குறித்து பேசினா்.

‘அஷ்டாதஸ ஸ்லோகீ கீதை’ எனப்படும் 18 ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து, ஒப்பித்த மாணவா்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

மேல்நிலைப் பள்ளிப் பொறுப்பாளா் வி.வேல்முருகன், உதவி முதல்வா் ஹா்ஷா சந்த்சேத்தி உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா். துணை முதல்வா் ஏ.தேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com