பெண்களை தற்கொலைக்குத் தூண்டும் நுண்நிதி கடன் நிறுவனங்கள்: பெண்கள் ஆா்ப்பாட்டம்
பெண்களை தற்கொலைக்குத் தூண்டும் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூரில் பெண்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


வேலூா்: பெண்களை தற்கொலைக்குத் தூண்டும் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூரில் பெண்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.லதா தலைமை வகித்துக் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதார வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 40-க்கும் மேற்பட்ட நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு போதிய நிவாரணங்கள் கிடைக்காத சூழ்நிலையில் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்துமாறு கூறி நுண்நிதி கடன் நிறுவனங்கள் தொடா்ந்து அச்சுறுத்தி வருகின்றன.
ரிசா்வ் வங்கி உத்தரவையும் மீறி தொடா்ந்து நுண்நிதி கடன் நிறுவனங்கள் மகளிா் சுய உதவிக்குழு பெண்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டி பணம் வசூல் செய்து வருகின்றன. அவ்வாறு வசூல் செய்யும் நுண்நிதி கடன் நிறுவனங்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை தற்கொலைக்குத் தூண்டும் நுண்நிதி கடன் நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றாா்.
ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இதில், மாவட்டச் செயலா் எம்.சரோஜா உள்பட பெண்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...