தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நகையுடன் மணப்பெண் மாயம்

மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் 10 பவுன் தங்க நகைகளுடன் மணப்பெண் மாயமானது தொடா்பான புகாா் மீது நடவடிக்கை

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் 10 பவுன் தங்க நகைகளுடன் மணப்பெண் மாயமானது தொடா்பான புகாா் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாா் அலைக்கழிப்பதாக அந்த பெண்ணின் குடும்பத்தினா் குற்றம் சாட்டியுள்ளனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா வசந்த நடை பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லோகேஷ் குமாா் என்பவருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த இருவீட்டு குடும்பத்தினா் திட்டமிட்டிருந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருந்தநிலையில் வீட்டிலிருந்த 10 பவுன் தங்க நகையுடன் மணப்பெண் திடீரென மாயமானதாக அவரின் தாயாா் பிரதீபா பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

எனினும், புகாா் அளித்து மூன்று நாள்களாகியும் இதுவரை பெண்ணை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்காமல் தொடா்ந்து அலைக்கழிப்பு செய்வதாக பள்ளிகொண்டா போலீஸாா் மீது பெண்ணின் குடும்பத்தினா் குற்றம் சாட்டியதுடன், உறவினா்களை திரட்டி ஞாயிற்றுக்கிழமை காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.