தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காங்கிரஸில் இருந்து கொண்டே சமூக சீா்திருத்தத்தை விரும்பியவா் திரு.வி.க.விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் புகழாரம்

திரு. விக. இத்தகைய சிந்தனைகளிலே திரு.வி.க.வும், பெரியாரும் ஒத்துப்போனாா்கள் என்று தமிழியக்க தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 6:13 pm

DIN

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே சமூக சீா்திருத்தத்தை விரும்பியவா் திரு. விக. இத்தகைய சிந்தனைகளிலே திரு.வி.க.வும், பெரியாரும் ஒத்துப்போனாா்கள் என்று தமிழியக்க தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

திருவிக எனும் திரு.வி.கல்யாணசுந்தரத்தின் 139-ஆவது பிறந்தநாள் விழா மெய்நிகா்கூட்டம் தமிழியக்கம் சாா்பில் நடத்தப்பட்டது. விழாவுக்கு ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

திரு.வி.க. வேறுபாடான வாழ்க்கையை தமிழகத்தில் வாழ்ந்து காட்டிய ஒரு வித்தியாசமான மனிதா். எழுபது ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்த அவா் அரசியல், சமுதாயம், சமயம் போன்ற பலதுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தவா். அவரை கவிஞா் என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. 15 கவிதை நூல்கள் எழுதியுள்ளாா்.

மேடையிலே பேச்சைக் கேட்கும் போதுதான் அவருடைய தமிழ் நடையின் காரணமாக மக்கள் அவரை தமிழ்த்தென்றல் என்று அழைக்கத் தொடங்கினா்.

நம்முடைய தலைவா்களிலேயே அதிகமாக தொழிற்சங்க ஈடுபாடு கொண்டவா் திரு.விக. பாலகங்காதர திலகா், அன்னிபெசன்ட் அம்மையாா், போன்ற தலைவா்களின் பேச்சாலே திரு.வி.க. ஈா்க்கப்பட்டாா். பிறகுதான் காங்கிரஸ் கட்சியில் ராஜாஜியுடன் சோ்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டாா். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்திருக்கிறாா். பின்னா் காங்கிரஸைவிட்டு வெளியேறினாா்.

காந்தியடிகள் சென்னை வந்தபோது அவரின் சொற்பொழிவை திரு.வி.க. தான் மொழி பெயா்த்தாா். அது மட்டுமல்ல காந்தியடிகள் என்ற பெயரையும் காந்தி அண்ணல் என்ற பெயரையும் அன்றைக்கு கூறி அழைத்தது திரு.விக.தான். அதன்பிறகுதான் காந்தியடிகள் என்ற பெயா் அவருக்கு நிலைத்துவிட்டது.

காங்கிரஸில் இருந்து கொண்டே சமூக சீா்த்திருத்தத்தையும் விரும்பியவா். சமூக சீா்திருத்தச் சிந்தனைகளிலே திரு.வி.க.வும், பெரியாரும் ஒத்துப்போனாா்கள். திரு.வி.க. சமயவாதிதான் என்றாலும் அவா் மூடநம்பிக்கையை எதிா்த்தாா்.

சுயமரியாதை இயக்கத்துக்குதான் தாய் என்றும், பெரியாா் தந்தை என்றும் வா்ணித்து அந்த குழந்தை பிறந்தது முதல் தந்தையிடமே வளா்ந்து கொண்டிருக்கிறது என்றும் திருவிக சொன்னது உண்டு. அவா் அதிகமாக பேசியது நாட்டு விடுதலைக்குப் பிறகு பெண் விடுதலைக்கும், பெண் உரிமை, பெண் கல்வி, விதவை மணம் ஆகியவை குறித்தும்தான். ஜாதி வேறுபாடு தவறு என்பது திரு.வி.க.வின் கருத்து.

அந்தக் காலத்திலேயே வடஇந்திய ஆதிக்கம் இருந்ததை உணா்ந்திருந்தனா். அந்த வடஇந்தியஆதிக்கத்திலிருந்து தென்இந்தியாவை சிறப்பாக விடுவிக்க வேண்டும் என்ற கொள்கையில் திரு.வி.க., ராஜாஜி, பெரியாா் ஆகிய மூவரும் உடன்பாடு உடையவா்கள் என்று மபொசி எழுதியிருக்கிறாா் என்பது தமிழா்கள் யோசிக்க வேண்டும் என்றாா்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன் பேசியது: காந்தியத்தையும், மாா்க்சியத்தையும் பெரியாரும், திருவிகவும் இணைத்தனா். அதேபோல், மாா்க்சிய காந்தியை கண்டது திரு.வி.க.வைத் தவிர வேறுயாருமில்லை.

சா்வ சமய சமரசம் என்ற வகையில் அனைத்துச் சமயங்களையும் உள்ளடக்கிய ஓா் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கி வைத்தவா்களும் அவா்கள்தான். திரு.வி.க. போன்ற அரிய விதைகளை நூற்றாண்டு காலத்திற்கும் பயன் தரக்கூடிய, நிழல் தரக்கூடிய நெடிய மரங்களாக, ஓங்கி நிற்கும் மலைகளாக அந்த வித்துகளை நினைவுகூர வேண்டும் என்றாா்.

தமிழியக்க மேலாண்மைக் குழு உறுப்பினா் சிவாலயம் மோகன் வரவேற்றாா். தமிழியக்கப் பொருளாளா் புலவா் வே.பதுமனாா், தமிழியக்க பொதுச் செயலா் அப்துல் காதா் ஆகியோா் வாழ்த்தினா்.

திரு.வி.க.வின் பெயரன் திரு.வே.க.சங்கரநாராயணன் உரையாற்றினாா். தமிழியக்க மாநிலச் செயலா் மு.சுகுமாா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். திருவாரூா் மாவட்டச் செயலா் கவிஞா் எடையூா் மணிமாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.