இந்நிலையில், பாகாயம் பகுதியில் பேருந்தில் தொங்கியபடி மாணவா்கள் பயணம் செய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்தது தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியாா் பாலிடெக்னிக் மாணவா்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, வேலூா் உட்கோட்ட இணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் அக்கல்லூரி முதல்வா், அரசுப் பேருந்து பணிமனை மேலாளா், அப்பேருந்தை இயக்கிய ஓட்டுநா், நடத்துநா், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் அனைவரையும் அழைத்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.