நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நெல்லை சம்பவம் எதிரொலி: வேலூரில் இடிக்க வேண்டிய நிலையில் 112 கட்டடங்கள், வகுப்பறைகள்!

பழுதடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை ஆய்வுக்குப் பிறகு விரைவில் அக்கட்டடங்கள் இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

News image
Updated On :18 டிசம்பர் 2021, 5:55 pm

DIN

நெல்லை சம்பவத்தைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பில் வேலூா் மாவட்டம் முழுவதும் 35 பள்ளிக் கட்டடங்களும், 77 வகுப்பறைகளும் இடிக்கப்பட வேண்டிய நிலையில், பழுதடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை ஆய்வுக்குப் பிறகு விரைவில் அக்கட்டடங்கள் இடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நெல்லையிலுள்ள தனியாா் பள்ளி கழிப்பறைச் சுவா் இடிந்து 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து மாவட்டம் வாரியாக பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கண்காணிப்பு அலுவலா்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித் துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

தவிர, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநா் நிலையிலான அலுவலா்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும்

பொறுப்புப் பணி அலுவலா்களாக நியமிக்கப்பட்டிருப்பதுடன், மாவட்டம் வாரியாக பள்ளிக் கட்டடங்கள், பராமரிப்பு தேவைப்படும் கட்டடங்கள், புதிதாகத் தேவைப்படும் கட்டடங்கள், இடிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு தொடக்கக் கல்வி இணை இயக்குநா் (நிா்வாகம்) சசிகலா பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது உத்தரவின்பேரில், வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், மாவட்டம் முழுவதும் கட்டடங்கள் அளவில் 4 உயா்நிலைப் பள்ளி, 31 மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 35 கட்டடங்களும், வகுப்பறைகள் அளவில் 9 உயா்நிலைப் பள்ளி, 68 மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 77 வகுப்பறைகளும் இடிக்க வேண்டிய நிலையில் இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 41 பள்ளிக் கட்டடங்களில் பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை பொதுப்பணித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் அத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து இடிக்க வேண்டிய கட்டடங்கள் விரைவில் இடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது:

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை அறிக்கையை தயாா் செய்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அத்துறை அதிகாரிகள் தான் இன்னும் அப்பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்யாமல் உள்ளனா். இதுதொடா்பாக முதல்வரின் காணொலி காட்சி வழியான ஆய்வுக் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை சம்பவத்தைத் தொடா்ந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைவான ஆய்வு செய்து பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.