நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புதிரை வண்ணாா் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

புதிரை வண்ணாா் நல வாரியத்தில் உறுப்பினராக சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதிரை வண்ணாா் நல வாரியத்தில் உறுப்பினராக சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் உள்ள தமிழ்நாடு புதிரை வண்ணாா் நல வாரியத்தில் அதிகப்படியான புதிரை வண்ணாா் இனத்தவா்களை புதியதாக உறுப்பினா்களாக சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவா்களிடமிருந்து குடும்பத்தில் ஒருவரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை நகலுடன் புகைப்படம் -2 இணைத்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ திங்கள்கிழமை மாலைக்குள் சோ்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.